உள்நாடு

பாடசாலைகளை திறப்பதற்கு முன் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய 32 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

(UTV | கொழும்பு) – பாடசாலைகளை திறந்து காலை, மாலை என இருநேர வகுப்புகளை நடத்துவது தொடர்பில் சாதக பாதக நிலைமைகளை கல்வி அமைச்சு ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கபப்டுகின்றது.

மாணவர்களை சமுக இடைவிலகலுடன் அமரச் செய்யும் பட்சத்தில் ஏற்படும் இடநெருக்கடியை தீர்ப்பது தொடர்பிலும் ஆராயப்படுகிறது என கல்வி அமைச்சின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாடசாலைகளில் உள்ள சுகாதார வசதிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். இவற்றைக் கருத்தில் கொண்டு பாடசாலைகளை திறப்பதற்கு முன் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டியது முக்கியமானது. இதற்காக 32 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related posts

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக ஏ.எச்.எம்.டீ. நவாஸ் [VIDEO]

பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்!

சமன் லால் பெர்னாண்டோ பிணையில் விடுதலை