சூடான செய்திகள் 1

பாடசாலைகளுக்கு விடுமுறை

(UTV|COLOMBO)-சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி, தெஹியோவிட்ட மற்றும் நிவித்திகல கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் குறித்த பாடசாலைகளுக்கு இன்றும் (21) நாளையும் (22) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல பாகங்களிலும் சீரற்ற காலநிலை நிலவுவதுடன் சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிக மழைவீழ்ச்சியை எதிர்பார்ப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டமூலம் தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானது

editor

படலந்த ஆணைக்குழு அறிக்கை – பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார் அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor

இலங்கை இராணுவத்தின் கேர்னல்கள் 16 பேர் பிரிகேடியர்களாக பதவி உயர்வு..