உள்நாடு

பாடசாலைகளில் சுகாதார வழிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும்

(UTV|கொழும்பு) – பாடசாலைகளில் கடைபிடிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள வழிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பாடசாலை பரீட்சைகள் இடம்பெறும் போதும் இந்த நடைமுறைகள் மிகக் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டுக்கு பொருத்தம் இல்லாத அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மறுசீரமைக்கப்படும் எனவும் விரைவில் புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Related posts

எதிர்கட்சிக்கு காஞ்சனாவிடம் இருந்து அழைப்பு

எஹெலியகொடை கல்வி வலய பாடசாலைகளுக்கு பூட்டு

கடற்படையை சேர்ந்த 151 பேர் பூரண குணமடைந்தனர்