ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, வட மாகாணத்தில் பல முக்கிய அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக செப்டம்பர் 1ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.
திங்கட்கிழமை, செப்டம்பர் 1 (யாழ்ப்பாணம்)
- காலை 8:30: மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தில் அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்பார்.
- யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் புதிய அலுவலகத்தையும் திறந்து வைப்பார்.
- பிற்பகல்: மண்டைத்தீவில் முன்மொழியப்பட்ட சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல்லை நாட்டுவார்.
செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 2 (முல்லைத்தீவு)
- வட்டுவாகல் பாலத்தின் புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைப்பார்.
- மாகாணத்தின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தென்னை முக்கோண வலயத்தின் அபிவிருத்திப் பணிகளையும் ஆரம்பித்து வைப்பார்.