அரசியல்உள்நாடு

பலஸ்தீன விடுதலைக்காகவும் காஸாவின் வெற்றிக்காகவும் நாம் அனைவரும் பிரார்த்திப்போம் – ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் இம்ரான் எம்.பி

பல்லினங்கள் வாழும் இந்த நாட்டின் சுபீட்சத்துக்காக பிராத்திப்பது இன்றைய ஈகை திரு நாளில் எமது கடமையாகும் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்து செய்தியிலயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,

இந்த இனிய நாளில் ஹஜ்ஜுப்பெருநாளை கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் எனது இனிய ஹஜ்பெருநாள் வாழ்த்துக்கள்
இறைதூதர்கள் நபீ இப்ராஹீம் (அலை) நபீ இஸ்மாயீல் (அலை) மற்றும் அன்னை ஹாஜரா ஆகியோரின் மாபெரும் தியாகத்தை நினைவு கூறும் வகையில் தியாகத் திருநாள் உலகமெங்கும் உள்ள முஸ்லிம்களால் கொண்டாடப்படுகிறது.

லட்சோப லட்சம் முஸ்லிம்கள் ஒன்று திரண்டு புனித மக்கா நகரிலும் அரபா பெரு வெளியிலும் பிராத்தனை செய்யும் இந்நாளை அடைந்து கொள்ளும் பாக்கியத்தை இறைவன் எமது சகோதரர்கள் பலருக்கும் வழங்கியுள்ளான். அல்ஹம்துலில்லாஹ்.

ஹஜ் கடமையைநிறைவேற்றுவதற்கு புனித மக்கா சென்றுள்ள ஹஜ்யாஜ்களின் ஹஜ் கடமை அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களுடைய பிரார்த்தனைகள் நிறைவேறுவதற்கும் பிரார்த்திப்போமாக.

ஆமீன் அத்துடன் பல்லினங்கள் வாழும் இந்த நாட்டின் சுபீட்சத்துக்காக இந்த ஈகைத் திருநாளில் ஒவ்வொரு முஸ்லீமும் பிராத்திப்போம்

அகிலத்து ஆதாரமாக திகழும் பலஸ்தீன பூமி சுதந்திர தேசத்துக்கான பிரசவ வலியை அனுபவிக்கும் இந்நாட்களில் பலஸ்தீன விடுதலைக்காகவும் காஸாவின் வெற்றிக்காகவும் நாம் அனைவரும் அல்லாஹ்வைப் பிரார்த்திப்போம்.

மேலும் ஹஜ் புகட்டும் பாடத்தை மற்றவர்களுக்கு முன்மாதிரியாகக்கொண்டு எமது வாழ்விலும் கடைப்பிடித்து எமது எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த இருப்பினை இந்த நாட்டில் ஏற்படுத்த நாம் அணைவரும் இணைந்து ஒற்றுமையாக பாடுபட முன்வருவோம்.

Related posts

மழை நிலைமை அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கும்

“Clean Sri Lanka” வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஜப்பான் உறுதி

editor

எரிபொருள் வரியை நீக்குவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் – காஞ்சன

editor