உள்நாடு

பலத்த காற்றினால் பல பகுதிகளுக்கு மின்சார விநியோகம் பாதிப்பு

ஹட்டன் பகுதியில் நேற்றைய தினம் வீசிய பலத்த காற்றினால், ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருவான்புர பொலனி, ஹட்டன் குடாகம, ஹட்டன் சித்தார தோட்டம் மற்றும் டிக்கோயா பகுதிகளில் உள்ள பல வீடுகளின் கூரைகள் முழுமையாகவும், பகுதியளவிலும் அள்ளுண்டு சென்றுள்ளதாகவும், அந்தப் பகுதிகளில் உயர் மின்னழுத்த மின் கம்பிகள் மற்றும் மின் கம்பங்கள் சரிந்து விழுந்ததாகவும் ஹட்டன் தலைமையக பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ரஞ்சித் ஜெயசேன தெரிவித்தார்.

மேற்படி வீடுகளில் வசிப்பவர்கள் தற்காலிகமாக தங்கள் உறவினர்களின் வீடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர், மேலும் மத்திய மலைநாட்டில் கடுமையான சீரற்ற வானிலை தொடர்ந்தும் நிலவி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வீசிய பலத்த காற்று காரணமாக, ஹட்டன் பகுதி முழுவதும் உயர் மின்னழுத்த மின் கம்பிகள் மற்றும் மின் கம்பங்கள் அறுந்து விழுந்துள்ளதாகவும், மின் தடையை சரிசெய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஹட்டன் மின்சார சபையின் மின்சார கண்காணிப்பாளர் நிமல் சமரகோன் தெரிவித்தார்.

இதேவேளை, நோர்டன்பிரிட்ஜில் உள்ள விமலசுரேந்திர நீர்மின் நிலையத்திற்கு செல்லும் வீதியில் நேற்று (30) இரவு ஒரு பெரிய மரம் விழுந்ததால், இன்று அதிகாலை வரை வீதியின் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்தது.

நோர்டன்பிரிட்ஜ் பகுதியில் வீசிய பலத்த காற்றின் போது குறித்த மரம் விழுந்ததாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதே நேரத்தில், ஹட்டனில் இருந்து தலவாக்கலை வரை செல்லும் உயர் மின்னழுத்த மின்கம்பி அமைப்பு (30) இரவு சரிந்து விழுந்ததால், கொட்டகலை மற்றும் தலவாக்கலை பகுதிகளுக்கான மின்சாரம் முழுவதுமாக பாதிக்கப்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

-கிரிஷாந்தன்

Related posts

மேலும் 26 பேர் பூரண குணம்

ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் கிறிஸ்மஸ் நிகழ்வுகள்!

தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு தொடர்ந்தும் பின்பற்றவும்