சூடான செய்திகள் 1

பராக்கிரம சமுத்திரத்தின் 8 வான் கதவுகள் திறப்பு

(UTV|POLANNARUWA)-நிலவும் மழையுடனான காலநிலையால் பராக்கிரம சமுத்திரத்தின் 10 வான் கதவுகளில், 8 வான் கதவுகள் இன்று பிற்பகல் திறக்கப்பட்டுள்ளன.

ஒரு அடி உயரத்திற்கு இவ்வாறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், விநாடிக்கு ஆயிரத்து 120 கன அடி நீர் அம்பன் கங்கை ஊடாக மஹாவலி கங்கைக்கு வெளியேற்றப்பட்டுள்ளது.

இதனால் அம்பன் கங்கை மற்றும் மஹாவலி கங்கையும் பயன்படுத்தும் போது அவதானமாக இருக்குமாறு நீர்பாசன திணைக்களம் அப்பிரதேச மக்களிடம் கோரியுள்ளது.

 

 

 

Related posts

ஜனாதிபதி தலைமையில் “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” மொனராகலை மாவட்ட இறுதி நிகழ்வு இன்று(06)

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி இன்று ஆரம்பம்

சட்டவிரோதமாக பிரவேசிக்க முயன்ற 30 புகழிட கோரிக்கையாளர்கள் கைது