உள்நாடு

பயணக்கட்டுப்பாட்டில் தளர்வில்லை

(UTV | கொழும்பு) – தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதி வரை தொடர்ந்தும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் கொவிட் தடுப்பு தேசிய செயலணி உறுப்பினர்களும் இடையில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதற்கமைய, எதிர்வரும் மே 31 மற்றும் ஜூன் 4 ஆம்திகதிகளில் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படாமல், தொடர்ந்தும் ஜூன் 7 ஆம்திகதிவரை நீடிக்கும் என இராணுவ தளபதி தெரிவித்தார்.

Related posts

வீடியோ | அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம்!

editor

மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை அதிபர் பலி

editor

மக்கள் கண்ட கனவுகள் நனவாகும் யுகம் உருவாகியுள்ளது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor