உள்நாடு

பதவிகளில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை வைத்திருந்தால் வழக்கு

(UTV | கொழும்பு) – அறுபது வயதுக்கு மேற்பட்ட உத்தியோகத்தர்களை கல்வி அமைச்சு தொடர்ந்தும் அதே பதவிகளில் வைத்திருந்தால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.

இவ்வருட இறுதிக்குள் கல்வி நிர்வாக சேவையில் முதல் தர அதிகாரிகளின் எண்ணிக்கை முந்நூறைத் தாண்டும் எனவே தற்போதுள்ள உயர் அதிகாரிகள் ஓய்வு பெறுவதில் முறைமைக்கு சிக்கல் இருக்காது என ஊடகப் பேச்சாளர் பிரபாத் விதானகே தெரிவித்தார்.

ஓய்வுபெறும் சில உத்தியோகத்தர்களை அல்லது அந்த பதவிகளில் வைத்திருக்க கல்வி அமைச்சு எடுத்த தீர்மானத்திற்கு தற்போது பதவிகள் அற்ற தரநிலை மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கல்வி நிர்வாக சேவையின் இருநூற்றி பத்தொன்பது முதல் தர அதிகாரிகள் முதல் தர பதவிகள் இல்லாமல் இருப்பதாகவும், இவ்வாறான நிலையில் அவர்களை சேவையில் வைத்திருப்பது தமக்கு இழைக்கப்படும் பாரிய அநீதி எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஓய்வுபெறும் வயதை அறுபது வயதாகக் குறைப்பதன் மூலம் சுமார் இருபதாயிரம் சிரேஷ்ட அதிகாரிகள் ஓய்வு பெறுவார்கள் என்றும், கல்வி மற்றும் சுகாதாரத் துறைகள்தான் அதிகம் பாதிக்கப்படும் என்றும் பொது நிர்வாக அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

Related posts

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்தார் விஜயதாஸ ராஜபக்ஷ

editor

மத்திய வங்கியின் சட்டப்பிரிவு பணிப்பாளரின் மகன் தற்கொலை

தேசபந்து தென்னகோனின் பிணைக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனு!

editor