சூடான செய்திகள் 1

பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று(12) முதல் மேலதிக பேரூந்துகள்- ரயில்கள் சேவையில்

(UTV|COLOMBO) பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று(12) முதல் மேலதிக பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அதன் போக்குவரத்து பிரிவின் பிரதி பொது முகாமையாளர் பீ.எச்.ஆர்.டி.சந்திரசிறி தெரிவிக்கையில், இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் சேவையில் ஈடுபடும் பேரூந்துகள் தவிர, இன்றைய தினம் மேலதிகமாக 250 பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இன்றைய தினம் 19 ரயில்கள் வழமைக்கு மாறாக சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

 

 

Related posts

தனிப்பட்ட உத்தியோகத்தர் 21 பேர்: கிழக்கு ஆளுநரின் செயல் அம்பலம்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு (UPDATE)

“இலங்கையில் கஞ்சா பயிர்ச்செய்கைதிட்டம் அடுத்த மாதம் முதல் ஆரம்பம் “டயானா கமகே