உள்நாடு

பசில் – கட்சியின் பின்வரிசை எம்.பிக்களுக்கு இடையே இன்று சந்திப்பு

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரான நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும், கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.

அலரிமாளிகையில் இன்று முற்பகல் 10 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் தற்போதைய கொவிட்-19 பரவல் நிலை தொடர்பிலும், ஏனைய பிரச்சினைகள் குறித்தும், இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்றும் சுழற்சி முறையிலான மின்வெட்டு

சுகாதார அமைச்சின் அறிவிப்பு

வாகன இறக்குமதியை மீள அங்கீகரிப்பது: பரிந்துரைகள் ஜனதிபதியிடம் கையளிப்பு… நடக்கப்போவதென்ன!