உலகம்

நைஜீரியாவில் லொறி வெடித்து விபத்து – 25 பேர் பலி

(UTV | நைஜீரியா ) – நைஜீரியா நாட்டில் டேங்கர் லொறி வெடித்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 25 பேர் சிக்கி உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நைஜீரியா நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் டேங்கர் லொறி திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பிற வாகனங்கள் மீது மோதி வெடித்து தீப்பிடித்தது.

இதன் காரணமாக அந்தப் பகுதியை கரும்புகை சூழ்ந்து கொண்டது. இந்த கோர விபத்தில் குறைந்தது 25 பேர் சிக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஈரானுக்கு ஆதரவாக அமெரிக்காவில் போராட்டம்

“பேரழிவுமிக்க தோல்வியை உலகம் எதிர்நோக்கி உள்ளது”

மியன்மார் இராணுவம் வன்முறையில் இருந்து விலகி செயற்பட வேண்டும்