உள்நாடு

நுரைச்சோலையில் பழுதடைந்த ஜெனரேட்டர் திங்கள் முதல் வழமைக்கு

(UTV | கொழும்பு) –   நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் பழுதடைந்த ஜெனரேட்டர் ஆகஸ்ட் 29 திங்கட்கிழமை முதல் மீண்டும் இயங்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின் உற்பத்தி நிலையமானது 300 மெகா வாட்ஸ் (MW) மின் உற்பத்தி செய்யும் மூன்று ஜெனரேட்டர்களைக் கொண்டுள்ளது, அதில் ஜெனரேட்டர் 02 பராமரிப்பில் இருக்கும் போது, மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள ஜெனரேட்டர் 01 சமீபத்தில் பழுதடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ரிஷாட்- சஜித் இடையிலான சிநேகபூர்வ இராப்போசன விருந்துபசார வைபவம்

editor

சிறைக்கைதிகளை பார்வையிடுவது குறித்த தீர்மானம் இன்று

மீன் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்படுகின்றது