உள்நாடு

நுகேகொடை மேம்பாலத்தில் முச்சக்கர வண்டி, லொறியுடன் மோதி விபத்து – இளைஞர் பலி

ஹைலெவல் வீதியில் நுகேகொடை மேம்பாலத்தில் இன்று அதிகாலை (23) இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

முச்சக்கர வண்டி ஒன்று மஹரகம திசையிலிருந்து கொழும்பு திசை நோக்கி பயணித்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின் இருக்கையில் அமர்ந்திருந்த இளைஞர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் மீகமவத்தை, வத்தேகம பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது.

சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மிரிஹான பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

தரம் 1ற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ள புதிய சுற்றறிக்கை!

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தைக் கடந்தது

தேசபந்து தென்னக்கோன் பிணையில் விடுதலை

editor