உள்நாடு

நீர் வெட்டு குறித்து விசேட அறிவிப்பு

சில பகுதிகளில் அவசர நீர் வெட்டு தொடர்பில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மின்சார சபைக்குச் சொந்தமான அமைப்பின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக, குறித்த நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிர்வரும் 27 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை 8 1/2 மணி நேரம் நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவை நகர சபைப் பகுதிகள், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவங்கொடை மற்றும் கம்பஹா பிரதேச சபைப் பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என்று நீர் வழங்கல் சபை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related posts

கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை சபையின் பணிப்பாளராக சாய்ந்தமருது சர்ஜூன் அபுபக்கர் நியமனம்.

மேலும் 190 ஊழியர்களுக்கு கொரோனா

IMF அவசர உதவி ஒதுக்கீடுகளை அதிகரிப்பதில் கவனம்