சூடான செய்திகள் 1

நீர் விநியோகத் தடை!

(UTVNEWS | COLOMBO) – கொழும்பு 13,14,15 ஆகிய பிரதேசங்களுக்கு நாளை காலை 9 மணி முதல் 18 மணி நேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு 13,14 மற்றும் 15 பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

மேலும் கோட்டை மற்றும் கொழும்பு – 09 பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் என நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய திருத்தபணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

புத்தாண்டை முன்னிட்டு பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு

வெடிப்புச் சம்பவத்தில் 13 நாடுகளை சேர்ந்தோர் உயிரிழப்பு

சீரற்ற காலநிலையால் 12 பேர் உயிரிழப்பு; 106,913 பேர் பாதிப்பு