உள்நாடு

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவு

(UTV|கொழும்பு) – நாட்டில் நிலவும் வறட்சியுடனான காலநிலை காரணமாக மின்னுற்பத்தி செய்யப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 56 வீதம், மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 65 வீதம், கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 57 வீதம், விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 79 வீதம், ரந்தெனிகல நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 82 வீதமாகவும் காணப்படுவதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சளார் சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மின்சாரத்திற்கான நாளாந்த கேள்வி அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஊரடங்கை மீறுபவர்களைக் கைது செய்ய விசேட நடவடிக்கை

புற்றுநோய் எண்ணெய் மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் புத்தாண்டுக்கு பின்னர்

10000 ரூபாய் பணம் வழங்கப்படுவதாக பரவும் தகவல் பொய் – இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

editor