சூடான செய்திகள் 1

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்ததுள்ளது

(UTV|COLOMBO) நீர் மின்னுற்பத்தி செய்யப்படும் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் மேலும் குறைவடைந்து வருவதாக, மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், நீர்மின் உற்பத்தி குறைவடைந்துள்ளதாக அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

எனினும், நீர் மின்னுற்பத்தி செய்யப்படும் நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளில் எதிர்வரும் நாள்களில் மழைவீழ்ச்சி பதிவாகுமென, வளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்வுக்கூறப்பட்ட போதிலும், எதிர்பார்த்த மழை வீழ்ச்சி பதிவாகாவிடில், நீர் மின்னுற்பத்தியில் பாரிய சவால்களை எதிர்​கொள்ள நேரிடுமென்று சுலக்ஷன மேலும் தெரிவித்தார்.

 

 

 

 

Related posts

SMS அனுப்பும் பசில் ராஜபக்ஷ!

பிரதமர் தலைமையில் ஹம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிர்மாணப் பணி அடிக்கல் நாட்டும் நிகழ்வு

பாராளுமன்ற குழப்ப நிலை தொடர்பான அறிக்கை பாராளுமன்றுக்கு