சூடான செய்திகள் 1

நீரோடை ஒன்றில் விழுந்து குழந்தை உயிரிழப்பு

(UTV|COLOMBO) அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்தெனிய பகுதியில் நீரோடை ஒன்றில் விழுந்து குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

நேற்று (10) பகல் 1 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீரோடையில் விழுந்த குழந்தை அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உல்பத்வெவ, ருகுனுகம பகுதியை சேர்ந்த 2 வயதும் 3 மாதங்களுமான குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

 

Related posts

விமல் , எஸ் பிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பொலிஸ் தலைமையகத்தில் புகார்

எதிர்கால சந்ததியினரைப் பாதுகாக்க சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்

ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைப்பு மனு: இடையீட்டு மனுவை தாக்கல் செய்த SJB (Petition)