தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக இறக்குவானை பிரதேசத்தில் சில பகுதிகள் இன்றையதினம் (20) நீரில் மூழ்கியுள்ளன.
இறக்குவானை பஸ் தரிப்பு நிலையம் மற்றும் இறக்குவானை பள்ளி வீதி, மற்றும் இறக்குவானை உக்குவத்தை பனாகொட வீதி என்பன இவ்வாறு நீரில் மூழ்கி உள்ளன.
இதன் காரணமாக மேற்படி பிரதேசத்தில் இன்றையதினம் மக்களின் இயல்பு நிலை முற்றாக பாதிப்படைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்
