சூடான செய்திகள் 1

நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி மாயம்

(UTV|COLOMBO) நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏத்துக்கால கடற்பகுதியில் நீராடிக் கொண்டிருந்த இரு இளைஞர்களில் ஒருவர் காணாமற்போயுள்ளார்.

உடுகம்பொல பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய நிமேஷ் ரணவீர எனும் இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

காணாமல் போன இளைஞரை நீர்கொழும்பு  பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஒன்றிணைந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

காற்றுடன்,மழையுடனான வானிலை அதிகரிக்கும் சாத்தியம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பாராளுமத்தில் ஏன் சமர்ப்பிக்கவில்லை – சஜித் சபாநாயகரிடம் கேள்வி | வீடியோ

editor

ஃபிலிப்பின்ஸ் ஜனாதிபதியை சந்திக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன