உள்நாடு

நிலவும் காலநிலை தொடர்பில் பாடசாலைகளுக்கு சுற்றறிக்கை

(UTV|கொழும்பு) – நாடளாவிய ரீதியாக நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக, மு.ப. 11.00 முதல் பி.ப. 3.30 வரை பாடசாலை மாணவர்களை அதிக வியர்வை தரும் பயிற்சிகளில் ஈடுபடுத்த வேண்டாம் என கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இந்நாட்களில் பாடசாலைகளில் இல்ல விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்று வரும் நிலையில், குறித்த காலநிலையினால் மாணவர்கள் அசௌகரியங்களுக்கும் உடல் நலக்குறைவுகளுக்கும் ஆளாகக் கூடும் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இறந்த நிலையில் கரையொதுங்கும் மீன்கள் குறித்து அறிக்கை கோரல்

தேசிய மருந்துக் கொள்கையில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி

O/L பரீட்சைக்கு சென்ற இரு மாணவிகள் மாயம்!