சூடான செய்திகள் 1

நிறைவுக்கு வந்தது நீராவியடிப்பிள்ளையார் ஆலயம் விவகாரம்

(UTVNEWS | COLOMBO) – முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலயம் தொடர்பாக மேன்முறையீடு மற்றும் மீளாய்வு மனுக்கள் வவுனியா மேல் நீதிமன்றத்தில் இன்று எடுக்கப்பட்டிருந்தன.

குறித்த வழக்கினுடைய முதலாவது தரப்பினராகிய புத்த பிக்கு மரணம் அடைந்த காரணத்தினால் அந்த வழக்கின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா மேல் நீதிமன்றத்திலே இடம்பெற்றுவந்த செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் சம்பந்தமான இரண்டு வழக்குகளும் முடிவுக்கு வந்ததாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்திருந்தனர்.

Related posts

இளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ

ஸ்ரீ.பொ.முன்னணியின் கூட்டத்திற்கு சென்ற சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

ரத்ன தேரர் 7 நாட்களுக்குள் அரசை கவிழ்ந்தால் தான் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவேன் – அசாத் சாலி