உள்நாடுபிராந்தியம்

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதிய பஸ் – 7 பேர் காயம்

பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த சந்தியில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (15) காலை 7.15 மணியளவில் குறித்த பஸ் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாத்ரீகர்கள் பயணித்த பஸ், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

பஸ்ஸில் 30 பேர் பயணித்துள்ள நிலையில் அவர்களில் 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பஸ்ஸியின் பிரேக், செயல் இழந்தமையினால் இந்த விபத்து நேர்ந்துள்ளமை தெரியவந்துள்ளது

Related posts

தென்னை மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அவசியம்

editor

கைத்தொழில் கல்லூரிகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம்

குழப்பங்களை தீவிரமாக்குவதை ஹக்கீம் நிறுத்த வேண்டும். ஹக்கீமின் பத்வாவுக்கு இஸ்லாமிய அறிஞர்களின் பதிலென்ன?