உள்நாடுபிராந்தியம்

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் மீது முறிந்து விழுந்த பாரிய மரம்

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்த தனியார் பேருந்து மீது மரம் விழுந்ததில் பேருந்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன்-மஸ்கெலியா பிரதான வீதியில் நிவ்வெளி பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக பிரதான வீதியில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து ஒன்றின் மீது மரம் விழுந்ததால், மரம் வெட்டப்படும் வரை நேற்று (30) மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை வீதியில் போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டிருந்தது.

மரம் சரிந்த நேரத்தில் பேருந்தில் யாரும் இல்லை என்றும், மரம் முறிந்து விழுந்ததால் பேருந்து கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

-கிரிஷாந்தன்

Related posts

நாட்டின் பொது முடக்கம் நீடிப்பு

சப்ரகமுவ சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது விசாரணை

மேலும் 138 பேருக்கு கொவிட் உறுதி