உள்நாடு

நிரந்தர நியமனம் தரக்கோரி கொழும்பில் போராட்டம்!

(UTV | கொழும்பு) –

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் ஆட்சிக்காலத்தில் பட்டதாரிகளுக்கு பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் பெற்றுத் தருவதாக கூறப்பட்டு ஒவ்வொரு துறைகளை தேர்ந்தெடுக்குமாறு பணிக்கப்பட்டுள்ளார்கள். அவ்வாறான சுமார் 22000 பேருக்கு கிராமப்புற பாடசாலைகள் வழங்கப்பட்டுள்ளன.
எனினும் தற்போது 3 வருடங்களுக்கு மேலாகியும் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை எனவும், தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு வலியுறுத்தி குறித்த பட்டதாரிகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 பேர் ஜனாதிபதியை சந்திக்க சென்றுள்ளதாகவும் தெரியவருகிறது.
இந்த நிலையில் ஏராளமான பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் கலகத்தடுப்பு படையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அநுராதபுரம், தலாவ பகுதியில் பேருந்து விபத்து – ஒருவர் பலி – பாடசாலை மாணவர்கள் உட்பட 40 பேர் காயம்

editor

ஆட்சியாளர்களின் அனுபவமின்மையே பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்புக்கு காரணம் – வஜிர அபேவர்தன

editor

மேல் நீதிமன்ற நடவடிக்கைகள் மீளவும் ஆரம்பம்