வகைப்படுத்தப்படாத

நியூசிலாந்து நகரில் இன்று துக்க தினம் அனுஷ்டிப்பு…

(UTV|NEW ZEALAND) நியூசிலாந்து நகரில் இன்று இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தினை துக்க தினமாக அனுஸ்டிக்குமாறு அந்த நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட பள்ளிவாசல்கள் மீது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

40 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பலர் உயிரிழந்திருப்பதாகவும் உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட இரு பள்ளிவாசல்களின் ஒன்றில் பங்களாதேஸ் கிரிக்கட் அணி வீரர்கள்  இருந்துள்ளதுடன் அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

வயோதிப பெண்ணொருவர் தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலை

நச்சுக்காற்றை சுவாசித்த 75 மாணவர்களுக்கு மூச்சு திணறல்…

எதிர்வரும் 24 மணி நேரத்தில் பலத்த காற்று! – அவதான எச்சரிக்கை!