உள்நாடு

நாளை முதல் வானிலையில் மாற்றம்

(UTV | கொழும்பு) – நிலவும் வரட்சியான காலநிலையில் எதிர்வரும் நாட்களில் மாற்றம் ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளையில் இருந்து நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என, அந்த திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களில் காலை நேரத்தில் பனியுடன் கூடிய காலநிலை காணப்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Related posts

நிதி அமைச்சராக ரணில் பதவிப்பிரமாணம் [UPDATE]

வற் பதிவு சான்றிதழ் தொடர்பில் விசேட அறிவிப்பு!

ஃபிட்ச் ரேட்டிங் இலங்கையின் கடன் மீள் செலுத்துகை தரநிலையை மேலும் குறைத்துள்ளது