சூடான செய்திகள் 1

நாளை கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை

(UTV|COLOMBO) நாளை 22ம் திகதி காலை 09 மணிமுதல் நாளை நள்ளிரவு 12 மணி வரை கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு 15 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது.

இதன்படி கொழும்பு, தெஹிவளை-கல்கிஸ்ஸ, கோட்டே, கடுவலை மாநகர சபை பகுதி, மகரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவை நகரசபைத் பகுதி, கொடிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபை பகுதி, றத்மலானை மற்றும் சொய்சாபுர மாடி வீட்டுத் தொகுதி ஆகிய பிரதேசங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்பட உள்ள அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாகவே நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது.

Related posts

மலர்ந்திருக்கும் புத்தாண்டு எதிர்பார்ப்புக்கள் நிறைவேற வழிவகுக்கும் ஆண்டாக அமைய வேண்டும்

அரசின் நடவடிக்கை தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடல்

புத்தளத்தில் கொரோனாவிற்கு இலக்கான நபர் குணமடைந்தார்