வகைப்படுத்தப்படாத

நாளை கொழும்பில் 18 மணி நேர நீர் விநியோகத் தடை

(UDHAYAM, COLOMBO) – நாளை காலை 10.00 மணி முதல் 18 மணிநேரம் கொழும்பு – 1, கொழும்பு – 2 ஆகிய பிரதேசங்களில் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகால் அமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, அக் காலப்பகுதியில் கொழும்பு 8 மற்றும் கொழும்பு 10 ஆகிய பிரதேசங்களில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் என அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

மனித கொலைகள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபரொருவர், துப்பாக்கியுடன் கைது

இங்கிலாந்தில் கடும் மழை – ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

இஸ்ரேல் பிரதமர் மீது இலஞ்ச ஊழல் வழக்கு பதிவு