உள்நாடு

‘நாம் திவாலாகிவிட்டோம் என்பது மக்களுக்கு ஏற்கனவே தெரியும்’

(UTV | கொழும்பு) – நாட்டின் வங்குரோத்து நிலையை மக்கள் உணர்ந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய எத்ரிகட்சித் தலைவர், நீண்ட நாட்களாக வரிசையில் நிற்கும் பொதுமக்களுக்கு பிரதமரிடம் என்ன பதில் இருக்கிறது என கேள்வி எழுப்பினார்.

பிரதமரும் ஜனாதிபதியும் நாட்டுக்கு போஷாக்கான உணவை வழங்கத் தவறிவிட்டனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஏற்றுமதியாளர்கள், சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள், சுற்றுலாத் துறையில் பணிபுரிபவர்கள், பள்ளிக் குழந்தைகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு என்ன தீர்வுகள் உள்ளன என்று அவர் கேள்வி எழுப்பினார்.

வரிசைகள் மற்றும் உணவு நெருக்கடி தொடர்பான பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க முடிந்ததாக பிரதமரிடம் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார்.

பிரதமரை நியமிக்கும் போது வெளிநாட்டு ஆதரவைப் பெற்றதாகவும் கூறியதாகவும், எனினும் அத்தகைய நடவடிக்கைகள் எதுவும் வெற்றிபெறவில்லை என்றும் அவர் கூறினார்.

Related posts

சாய்ந்தமருது குர்ஆன் மதரஸாவிலிருந்து சிறுவனின் சடலம் மீட்பு : நிர்வாகி கைது- பதற்ற நிலை

15 வயதுடைய இரு மாணவிகள் ஆலய கேணியில் தவறி விழுந்து உயிரிழப்பு

editor

“வாகனப் பதிவுக்கட்டணங்கள் உயர்வு”