உள்நாடு

நாமலின் வெளிநாட்டு பயணத்தடை ஜூலை மாதம் வரை  நீக்கம்

(UTV|கொழும்பு) – 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் பாராளுமன்ற உறுப்பினருக்கு சொந்தமான கோவர்ஸ் கார்ப்பரேட் சர்வீசஸ் மூலம் 30 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாக நாமல் ராஜபக்ஷ மற்றும் 5 பேருக்கு எதிராக மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 11 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வெளிநாட்டு பயணத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் தற்போது கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரட்ண பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையை 2020 ஜூலை மாதம் 23 ஆம் திகதி வரை நீக்கியுள்ளார்.

Related posts

சைகை மொழி தேசிய மொழியாக்கப்பட வேண்டும் – சபாநாயகரை சந்தித்த விசேட தேவையுடைய சங்கங்களின் பிரதிநிதிகள்

editor

வெள்ளை சீனி இறக்குமதி தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்

MAS Holdings நிறுவன ஊழியர்கள் சிலருக்கு கொரோனா உறுதி