உள்நாடு

நாட்டை முழுமையாக முடக்குவதற்கு எவ்வித தீர்மானங்களும் இல்லை

(UTV | கொழும்பு) – நாட்டை முழுமையாக முடக்குவதற்கு எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தாக்கத்தின் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டதை அவதானித்ததாக கூறிய அமைச்சர், இலட்சக்கணக்கானவர்களுக்கு தொழில் இல்லாமல் போனதாக கூறினார்.

இலங்கை போன்று பாரியளவில் கடன் சுமையால் நசுக்கப்பட்டுள்ள நாட்டை, முழுமையாக முடக்குவதாக இருந்தால், அதற்கான பொருளாதார பலம் இல்லை. முடக்குவதற்கான செய்வதற்கான தேவை இருக்கின்ற போதிலும் அதனை மேற்கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

நாட்டை முடக்காமல், திறந்து வைத்து இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்கவே முயற்சிப்பதாகவும் கொரோனா வைரஸுடன் வாழ வேண்டிய சவாலே தற்போது உள்ளதாகவும் ஆகையால் இயலுமானவரை நாட்டை திறந்து வைத்து, நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டி உள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் தாமதம்!

இலங்கை பொலிஸின் சமூக ஊடக கணக்குகள் மீது சைபர் தாக்குதல் – YouTube தவிர ஏனைய வலைத்தளங்கள் வழமைக்கு

editor

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் – ஒத்திவைப்பு விவாதம் அடுத்தவாரம்