உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டைவிட்டு ஓடும் மைத்திரி?

தான் தென்கொரியாவில் வசிக்கப் போவதாக தெரிவித்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் பொய்யானவை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தென் கொரியாவுக்கோ அல்லது உலகின் வேறு எந்த நாடுகளுக்கோ தான் செல்ல விரும்பவில்லை என முன்னாள் ஜனாதிபதி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அரசியல் எதிரிகளால் வெளியிடப்படும் இவ்வாறான பொய்யான அறிக்கைகளை வன்மையாக நிராகரிப்பதாக அவர் குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான கருத்து மற்றும் சுதந்திர கட்சியின் பதவி தொடர்பான விவகாரங்களில் சிக்குண்டு மைத்திரிபால சிரிசேன தவித்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கம்பனிகளுடன் எந்தவித சமரசமும் கிடையாது – செந்தில் தொண்டமான் திட்டவட்டம்

ரவி மற்றும் அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை

வோட் பிளேஸ் வீதிக்கு தற்காலிகமாக பூட்டு