உள்நாடு

நாட்டில் 10 இற்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இரத்து

(UTV | கொழும்பு) – சில ரயில் மார்க்கங்களின் 14 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கட்டுப்பாட்டாளர்கள் பலருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதால் இவ்வாறு ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, பிரதான ரயில் மார்க்கத்தின் 6 ரயில் சேவைகளும், களனி வெளி மற்றும் கரையோர ரயில் மார்க்கங்களின் தலா 2 ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், புத்தளம் ரயில் மார்க்கத்தின் 3 ரயில் சேவைகளும், வடக்கிற்கான ஒரு ரயில் சேவையும் இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

முன்னாள் எம்.பி சாந்த அபேசேகரவும் அவரது மகனும் கைது

editor

ஒரு வாரத்திற்கு முன்பு கொழும்பு சென்று இரு இராஜதந்திரிகளை சந்தித்த நீதிபதி – சரவணராஜா.

மட்டக்களப்பு, உன்னிச்சையில் யானைகளின் அச்சுறுத்தல் – பெண்னொருவர் கவலைக்கிடம்!

editor