உள்நாடு

நாட்டில் 10 இற்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இரத்து

(UTV | கொழும்பு) – சில ரயில் மார்க்கங்களின் 14 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கட்டுப்பாட்டாளர்கள் பலருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதால் இவ்வாறு ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, பிரதான ரயில் மார்க்கத்தின் 6 ரயில் சேவைகளும், களனி வெளி மற்றும் கரையோர ரயில் மார்க்கங்களின் தலா 2 ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், புத்தளம் ரயில் மார்க்கத்தின் 3 ரயில் சேவைகளும், வடக்கிற்கான ஒரு ரயில் சேவையும் இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – பள்ளிவாசல்களை பயன்படுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை – முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் எச்சரிக்கை

editor

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 22 இந்திய பிரஜைகள் கைது

editor

இனத்தீர்வு முன்மொழிவுகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்த அதாவுல்லாஹ்!