உள்நாடு

நாட்டில் மீண்டும் வலுக்கும் கொரோனா பலிகள்

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணித்தியாலத்தில் நாட்டில் மேலும் 37 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, 18 ஆண்களும் 19 பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,611 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 277,519 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 253,014 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண ஜனாதிபதியினால் விசேட அழைப்பு

மஹிந்தானந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

கப்பல்களிலுள்ள லிட்ரோ நிறுவன எரிவாயு மாதிரிகள் பரிசோதனைக்கு