நாட்டின் பல்வேறு பிரதேச செயலகப் பிரிவுகளில் பரவியுள்ள ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்கும் நோக்கில், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார பணிப்பாளர் நாயகம் விசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, இந்த வர்த்தமானி அறிவிப்பின் மூலம், 1992 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க விலங்கு நோய்கள் சட்டத்தின் கீழ், இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களும் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் அபாயப் பகுதிகளாகவும் இந்த நோய்க்கான அபாய விலங்குகளாக பன்றிகள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.