உள்நாடுசூடான செய்திகள் 1

நாடு முழுவதும் திடீர் மின் தடை – காரணம் வௌியானது

பாணந்துறை உப மின் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக நாடு முழுவதும் மின் விநியோகத் தடை ஏற்பட்டதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அறிக்கை ஒன்றை வௌியிட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

பாணந்துறை உப மின் கட்டமைப்பில் ஏற்பட்ட பிரச்சினையால், தேசிய மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுடன் இணைந்து நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளது.

மின்சார விநியோகத்தை மீட்டெடுக்கும் பணியில் ஊழியர்கள் செயற்பட்டு வருவதாகவும், திடீரென ஏற்பட்ட மின்வெட்டுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

திடீரென முறிவடைந்த பேச்சுவார்த்தை – உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி தனித்துப் போட்டி

editor

பிரதி அமைச்சரின் உரையால் பிரதமர் ஹரிணி அதிருப்தி

editor

நீண்ட காலமாக மூடப்பட்டுள்ள மன்னார் – புத்தளம் பாதை மீள் திறப்பு தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் அதிகாரிகள் குழு விஜயம்