உள்நாடு

நாடு முழுவதும் கனமழை – நிரம்பி வழியும் நீர்த்தேக்கங்கள்

நாடு முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 73 முக்கிய நீர்த்தேக்கங்களில் 46 நீர்த்தேக்கங்கள் இன்னும் நிரம்பி வழிவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவற்றில், அம்பாறை மாவட்டத்தில் உள்ள 9 நீர்த்தேக்கங்களில் 7, அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள 10 நீர்த்தேக்கங்களில் 7, பதுளை மாவட்டத்தில் உள்ள 7 நீர்த்தேக்கங்களில் 5, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 4 நீர்த்தேக்கங்களில் 2, ஹம்பாந்தோட்டை மாவட்டம் மற்றும் காலி மாவட்டத்தில் உள்ள 2 நீர்த்தேக்கங்களில் 1 நீர்த்தேக்கத்திலும் நீர் வழிந்து செல்வதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

கண்டி மாவட்டத்தில் உள்ள மூன்று நீர்த்தேக்கங்களும், குருநாகல் மாவட்டத்தில் உள்ள 10 பிரதான நீர்த்தேக்கங்களில் 5, மொனராகலை மாவட்டத்தில் உள்ள 3 பிரதான நீர்த்தேக்கங்களில் 2, பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள 4 பிரதான நீர்த்தேக்கங்களில் 3, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 5 நீர்த்தேக்கங்களில் 2, வவுனியா மாவட்டத்தில் உள்ள 4 முக்கிய நீர்த்தேக்கங்களில் ஒன்று என்ற அடிப்படையில் இதுவரையில் 46 நீர்த்தேக்கங்களில் நீர் இன்னும் நிரம்பி வழிவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

75வது சுதந்திர தினத்தை நாடு கண்ணியத்துடன் கொண்டாட வேண்டும்

கடந்த 24 மணித்தியாலத்தில் 9,136 பேருக்கு தடுப்பூசி

இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட யட்டவர பண்டாரவின் சடலம்!