உள்நாடு

நாடு முழுவதும் கனமழை – நிரம்பி வழியும் நீர்த்தேக்கங்கள்

நாடு முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 73 முக்கிய நீர்த்தேக்கங்களில் 46 நீர்த்தேக்கங்கள் இன்னும் நிரம்பி வழிவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவற்றில், அம்பாறை மாவட்டத்தில் உள்ள 9 நீர்த்தேக்கங்களில் 7, அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள 10 நீர்த்தேக்கங்களில் 7, பதுளை மாவட்டத்தில் உள்ள 7 நீர்த்தேக்கங்களில் 5, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 4 நீர்த்தேக்கங்களில் 2, ஹம்பாந்தோட்டை மாவட்டம் மற்றும் காலி மாவட்டத்தில் உள்ள 2 நீர்த்தேக்கங்களில் 1 நீர்த்தேக்கத்திலும் நீர் வழிந்து செல்வதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

கண்டி மாவட்டத்தில் உள்ள மூன்று நீர்த்தேக்கங்களும், குருநாகல் மாவட்டத்தில் உள்ள 10 பிரதான நீர்த்தேக்கங்களில் 5, மொனராகலை மாவட்டத்தில் உள்ள 3 பிரதான நீர்த்தேக்கங்களில் 2, பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள 4 பிரதான நீர்த்தேக்கங்களில் 3, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 5 நீர்த்தேக்கங்களில் 2, வவுனியா மாவட்டத்தில் உள்ள 4 முக்கிய நீர்த்தேக்கங்களில் ஒன்று என்ற அடிப்படையில் இதுவரையில் 46 நீர்த்தேக்கங்களில் நீர் இன்னும் நிரம்பி வழிவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

வாக்களிக்க விடுமுறை வழங்காவிட்டால் ஒரு மாதகாலம் சிறை – பெப்ரல் அமைப்பு எச்சரிக்கை

editor

இந்த அரசாங்கம் இல்லையெனில், இலங்கை இன்று ஐஸ்லாந்தாகியிருக்கும் – பிரதி அமைச்சர் முனீர் முளப்பர்

editor

அனைத்து பயணிகள் விமானம் – கப்பல்கள் இலங்கைக்கு வரத் தடை