அரசியல்உள்நாடு

நாடு பூராகவும் தொடரும் கொலைச் சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும் – சஜித் பிரேமதாச

நாடு முழுவதும் கொலைச் சம்பவங்கள் நடந்து வரும், கொலை கலாச்சாரம் இருந்து வரும் நிலையில் நாட்டு மக்களினதும் மக்கள் பிரதிநிதிகளினதும் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், சமூகத்தில் அனைவரும் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

சட்டம் ஒழுங்கு அமைச்சர் இது குறித்து கருத்து தெரிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பிள்ளைகள் மற்றும் ஒட்டு மொத்த சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் முறையான வேலைத்திட்டத்தை முன்வையுங்கள்.

நீதிபதிகளினதும் சட்டத்தரணிகளினதும் பாதுகாப்பு கூட பாதிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Related posts

கொள்கை வகுப்பதிலிருந்து நாட்டின் தலைமைத்துவம் வரை இன மத பேதமின்றி இளைஞர்களை வலுவூட்டுவோம் – சஜித்

editor

முட்டை விலை இன்னும் குறைக்கப்படவில்லை – பேக்கரி உரிமையாளர்கள்

ஜனாதிபதி இன்று இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பார்