உள்நாடு

நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் இன்று தீர்மானம்

(UTV | கொழும்பு) – நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான தெரிவுக்குழு இன்று (13) ஒன்று கூடவுள்ளதாக நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன்படி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று பிற்பகல் 2.30 அளவில் நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்று கூடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்தவாரம் நாடாளுமன்ற அமர்வு நடத்தப்படவுள்ள தினம் மற்றும் அதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது தீர்மானிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் நாடாளுமன்ற அமர்வை நடத்துவதற்கு முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

ஈஸ்டர் தின தாக்குதலுக்கும் எனக்கும் எந்த தொடர்புமில்லை – அஸாத்தின் குற்றச்சாட்டுக்கு கோட்டா பதில்

editor

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை விஜயம் குறித்து வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு

editor

படிப்படியாகக் குறைந்து வரும் டொலரின் பெறுமதி

editor