உள்நாடுசூடான செய்திகள் 1

நாடாளுமன்றில் குழப்பம் – சபை ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) –

எதிர்க்கட்சித் தலைவரின் உரையினையடுத்து ஏற்பட்ட குழப்பம் காரணமாக நாடாளுமன்ற அமர்வுகள் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆற்றிய உரையினையடுத்து ஏற்பட்ட குழப்பம் காரணமாக நாடாளுமன்ற அமர்வுகள் 5 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆற்றிய உரை தொடர்பாக ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தை நோக்கி வந்து குழப்பத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சபை நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமையில் சபாதநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன சபை நடவடிக்கைகளை 5 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

24வது மரணமும் பதிவு

சாய்ந்தமருது கல்முனை சவலக்கடை பகுதிகளில் தொடர்ந்தும் ஊரடங்கு உத்தரவு

தர்கா நகரில் 14 வயது சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம் – விசாரணைகள் ஆரம்பம் [VIDEO]