உள்நாடு

நாடளாவிய ரீதியில் சுமார் 10,000 ஹோட்டல்களுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – கோதுமை மாவு, முட்டை, இறைச்சி மற்றும் மீன் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள 30,000 ஹோட்டல்களில் சுமார் 10,000 ஹோட்டல்கள் முற்றாக மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.

இது தவிர, கோதுமை மாவு, முட்டை, இறைச்சி மற்றும் மீன் தட்டுப்பாடு காரணமாக அரசு நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளின் கேன்டீன்களில் கிட்டத்தட்ட பாதி மூடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

நாடு முழுவதும் அரசு நிறுவனங்களில் 3,000 கேன்டீன்களும், பாடசாலைகளில் 4,600 கேன்டீன்களும் இயங்கி வருகின்றன.

மேலும், கோதுமை மாவு, முட்டை, இறைச்சி மற்றும் மீன் தட்டுப்பாடு காரணமாக நிகழ்வுகளுக்கான (திருமண வீடுகள், மரண வீடுகள் மற்றும் மரண வீடுகள்) உணவு மற்றும் பான விநியோக சேவைகள் (கேட்டரிங்) கிட்டத்தட்ட முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அசேல சம்பத் தெரிவித்தார்.

Related posts

சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார்

editor

15 பயங்கரவாத அமைப்புகளுக்குத் தடை – அதிவிசேட வர்த்தமானி வெளியீடு – முழு விவரங்கள் இணைப்பு

editor

சபாநாயகரை சந்தித்த ஐக்கிய அமெரிக்கத் தூதுவர்

editor