உலகம்

நடுவானில் பறந்து கொண்டிருந்த எயார் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு

எயார் இந்தியாவின் போயிங் ட்ரீம்லைனர் ரக விமானம் ‘ஏஐ – 357’ நேற்று (29) ஜப்பான் தலைநகர் டோக்கியோ நகரிலுள்ள ஹனேடா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு புது டெல்லிக்குச் சென்று கொண்டிருந்தபோது, நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது.

அந்த விமானத்துக்குள் இயல்பைவிட அதிக வெப்பம் நிலவியது.

இதையடுத்து, பாதுகாப்பு கருதி விமானம் உடனடியாக கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, அந்த விமானத்திலிருந்த பயணிகள் மாற்று வழிகளில் டெல்லி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

நித்தியானந்தா சுவாமிகள் இறந்து விட்டதாக தகவல்?

editor

உலக கொரோனா : 5 கோடியை தாண்டியது

WHO உடன் கூட்டு சேர்ந்தே சீனா வைரஸினை பரப்பியது