உள்நாடு

தோல்வியில் ரணில்

(UTV | கொழும்பு) – பொதுத் தேர்தலுக்கான பெறுபேறுகள் வெளியாகி முடிந்த நிலையில், மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி அபார வெற்றியை பெற்றுள்ளது.

எனினும் ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டையான கொழும்பு மாவட்டத்தின் பல இடங்களில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

கொழும்பு மேற்கு, கொழும்பு மத்தி, கொழும்வு வடக்கு, பொரளை, தெஹிவளை ஆகிய தேர்தல் தொகுதியில் பொதுஜன பெரமுனவை விட அதிக வாக்கு வித்தியாத்தில் வெற்றி ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

இதனையடுத்து ஐக்கிய தேசிய கட்சி எந்தவொரு ஆசனத்தை பெற்றுக்கொள்ள கூடிய வாக்கினை பெறவில்லை என்பதோடு, ரணிலின் அரசியல் இருந்து ஓய்வு பெறுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Related posts

சிறு பிள்ளைத்தனமாக நடந்து கொள்ளாமல் பக்குவமாக செயற்படவும் – சாகர, சஜித்திடம் வலியுறுத்தல்

பொருளாதார நெருக்கடியினால் மிருகக்காட்சிசாலை மிருகங்களும் பட்டினியில்..

இரண்டு ஸ்ரீலங்கன் விமான சேவைகள் இரத்து!