உள்நாடு

தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடக் கோரிக்கை

(UTV | கொழும்பு) – தபால் ஊழியர்கள் தமது தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட்டு பணிக்கு சமூகமளிக்குமாறு தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனினும் எரிபொருள் நெருக்கடி காரணமாக தற்போது வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே தபால் சேவைகள் இயங்கி வருகின்றன.

அதன்படி, அனைத்து தபால் நிலையங்கள் மற்றும் துணை தபால் நிலையங்கள் செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் மட்டுமே இயங்கும்.

மூன்று நாட்களுக்கு திறக்க திட்டமிடப்பட்டாலும், பல தபால் நிலையங்கள் பல நாட்களாக செயல்படாமல் உள்ளன.

Related posts

விபத்தில் சிக்கி உயிரிழந்த சருகுப் புலி குட்டி

அதிகரிக்கப் போகும் குடிநீர் கட்டணம்

உயர் தர பரீட்சை பெறுபேறுகள் வௌியாகின்றது!