உலகம்

தொடர் மாடிக் கட்டிட தீ விபத்தில் சுமார் 80 பேர் காயம் 

(UTV | தென்கொரியா) – தென்கொரியாவின் உல்சான் நகரில் தொடர்மாடிக் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த தீப்பரவல் காரணமாக ஏற்பட்ட புகையினை சுவாசித்த சுமார் 80 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தீவிபத்துக்குள்ளான 32 மாடி கட்டடத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Related posts

கொலைக் குற்றத்திற்காக 29 புலனாய்வு அதிகாரிகளுக்கு மரண தண்டனை

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 50 சதவீத வரி விதித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்

editor

பிலிப்பைன்சில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றாளர் அடையாளம்