உள்நாடு

தைப்பொங்கல் பண்டிகைக்காக பஸ் போக்குவரத்து சேவை

தைப்பொங்கல் பண்டிகைக்காக கொழும்பிலிருந்து ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்கு போதுமான பஸ் சேவைகள் இருப்பதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை தைப்பொங்கல் பண்டிகை மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, புகையிரத திணைக்களம் 4 விசேட ரயில்கள்களை சேவையில் இணைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நேற்று முன்தினம் (10) முதல் ரயில்கள் சேவையில் இயக்கப்பட்டு வருவதாக புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் ஏ.டி. ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

கொழும்பு – கோட்டையிலிருந்து பதுளை நோக்கி இரவு 7.30 மணிக்கு ஒரு ரயில் புறப்படும் என்றும் மற்றைய ரயில் பதுளையில் இருந்து மாலை 5.40 மணிக்கு கொழும்பு – கோட்டை நோக்கி புறப்படும் என்றும் புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

ஸ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான UL 116 விமானத்திற்கு சேதம்

லேகியம் போதைப்பொருள் விற்பனை – ஒருவர் கைது !

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம்..!

editor