உள்நாடு

தேர்தல் பாதுகாப்பு – 69,000 பொலிஸார் கடமைகளில்

(UTV|கொழும்பு) – நாளை(05) நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு கடமைகளில் 69,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலதிகமாக சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் 10,500 பேர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், தேர்தல் கடமைகளுக்காக பொலிஸ் நடமாடும் சேவை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 3,069 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ரயில்வே ஊழியர்களிடையே வலுக்கும் கொரோனா

கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக நேரத்தில் மட்டு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக்கூறல் : நிராகரித்த இலங்கை அரசு