அரசியல்உள்நாடு

தேர்தல் சட்டத்தை மீறியிருந்தால் தண்டனையை ஏற்க தயார் – பிரதமர் ஹரிணி

மொரட்டுவையில் தான் அண்மையில் வெளியிட்ட அறிக்கை தேர்தல் சட்டத்தை மீறியதாகக் கருதப்பட்டால், தேர்தல் ஆணையம் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் தான் மதிப்பேன் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய கூறுகிறார்.

2025 உள்ளூட்சித் தேர்தலில் வாக்களித்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

தேர்தல் சட்டத்தை மீறும் நோக்கத்துடன் அந்த அறிக்கையை வெளியிடவில்லை என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

அதேநேரம், தற்போது சிறிய தவறுகள் கூட கேள்விக்குள்ளாக்கப்படுவது குறித்து பிரதமர் அமரசூரிய மேலும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

Related posts

தொலைபேசிகளை கொள்வனவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை !

கோட்டாபயவுக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுக்க உயர்நீதிமன்றம் அனுமதி

நாடு திரும்பும் அனைத்து இலங்கையர்களும் தியத்தலாவ இராணுவ முகாமிற்கு